இத்தாலியன் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலானதைத் தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார் மோடி.
துபையில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட மோடி இத்தாலி பிரதமர் உடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜியார்ஜியா, ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இருவரின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஜியார்ஜியாவின் பதிவைப் பகிர்ந்த மோடி, “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: துபை பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி வந்தடைந்தார் மோடி!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28) துபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மோடி, இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல், சோனியாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



