சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இங்கு விவசாயிகளை விட தற்கொலை செய்யும் மாணவர்கள் அதிகம்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 11:06 am

DIN

ஹைதராபாத்: கடந்த 2022ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் தகவலில், 2022ஆம் ஆண்டு 543 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும், இதே காலத்தில் பதிவான விவசாயிகளின் தற்கொலை 178 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 45 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக சராசரி காட்டுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை 499 ஆக இருந்தது. அதேவேளையில் கடந்த 2019 - 2022ஆம் ஆண்டு வரை தெலங்கானாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,025 ஆக உள்ளது.

மாணவர்களுக்கு அடுத்தபடியாக படித்த இளம் பட்டதாரிகள் 497 பேர் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. வெளியிலிருந்து வரும் அழுத்தமே மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முதலில் கல்வி, பிறகு காதல் மற்றும் வேலை போன்றவை தற்கொலைக்கான காரணங்களின் பட்டியலில் வரிசைகட்டி நிற்கின்றன.

தெலங்கானா மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 9,980 தற்கொலைகள் நடந்துள்ளன. ஆந்திர மாநிலத்திலும் மாணவர்களின் தற்கொலை விகிதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு 2022ஆம் ஆண்டு 575 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேசிய அளவில் மாணவர்களின் தற்கொலையில் ஆந்திரம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.