சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டிச.14-ல் தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல்!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2023, 1:21 pm

DIN

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் 64 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 39 தொகுதிகளில் வெற்றியடைந்த பிஆர்எஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்ச்சியை டிச.9-ஆம் தேதி அவர் நடத்தி வைத்தார்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவரது தேர்வை புறக்கணித்ததையடுத்து திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலை நடத்துவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அதற்கு மாறாக டிசம்பர் 14-ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.