புது தில்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று அவைக்குள் குதித்தனர்.
அந்த இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்த எம்பிக்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என்று இருவரும் கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் கருவியை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் மடத்திலிருந்து குதித்தனர். அவர்கள் கைகளில் வாயுக்கள் உமிழும் சாதனம் போன்றவற்றை வைத்திருந்தனர். அவர்களை எம்பிக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பு குறைபாட்டால் இது நடந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க | டிசம்பர் 13.. நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரை
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

