நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பேசாமல், விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ஜகதீப் தன்கா் அவையை வழிநடத்தும் விதத்தை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவாரம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “யார், அவமானப்படுத்தினார்கள்? எப்படி சொல்கிறீர்கள்?, நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர்; அதை நான் விடியோ எடுத்தேன்.
ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, கருத்துகளை வெளியிடுகின்றன. 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர், அது பற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை.
எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து யாரும் விவாதிக்கவில்லை. அதானி விவகாரம், ரஃபேல் மோசடி, வேலைவாய்ப்பின்மை குறித்தும் எதுவும் பேசவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.