காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவினரின் பொய்கள் மிகவும் வலுவானவை எனத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், 'மோடி 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமான வீடு கிடைக்கும் எனக் கூறியிருந்தார். அனைவருக்கும் 24 மணிநேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும் எனக்கூறினார்.
இதையும் படிக்க: நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்
ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் நன்றாகத் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 2021ல் எடுக்கப்பட வேண்டிய பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.