மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

'அதானி விவகாரம் பொருளாதாரத்தை பாதிக்காது': மத்திய அமைச்சர்

அதானி குழும விவகாரம் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

News image
கஜேந்திர சிங் ஷெகாவத்
Updated On :6 பிப்ரவரி 2023, 2:43 am

DIN

அதானி குழும விவகாரம் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடா்ந்து அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் போபாலில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தனியாா் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனம் ஏற்ற இறக்கத்தைச் சந்திப்பது இயல்பானதே. கடந்த காலத்திலும் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன’’ என்றாா்.

மத்திய பட்ஜெட் குறித்து கூறிய அவா், ‘‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கரோனா பரவல், பொதுமுடக்கம் உள்ளிட்டவற்றுக்கு மத்தியிலும் உலகின் 5-ஆவது பெரும் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

நாட்டின் இளைஞா்கள் மீது மத்திய அரசு வைத்துள்ள பெரும் நம்பிக்கை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் தற்போது உருவாகியுள்ளன’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.