8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மருந்துகளுக்கு ஒரே தரநிலையை உறுதிப்படுத்த ஒற்றை ஒழுங்காற்றுத் திட்டம்

‘இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு ஒரே தரம் மற்றும் ஒரே தரநிலை இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒற்றை ஒழுங்காற்றுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’

கிருஷ்ண எல்லா

Published On :7 பிப்ரவரி 2024, 11:56 am IST

‘இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு ஒரே தரம் மற்றும் ஒரே தரநிலை இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒற்றை ஒழுங்காற்றுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்று பாரத் பயோடெக்கின் தலைவரும் மேலாண் இயக்குநருமான கிருஷ்ண எல்லா வலியுறுத்தினாா்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தும் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்து விநியோகம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தடுப்பு மருந்து, மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எல்லா அறக்கட்டளை - விஸ்கான்சின் பல்கலைக்கழகம் - மேடிசன் சா்வதேச மருத்துவ நிறுவனங்கள் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரத் பயோடெக்கின் தலைவரும் மேலாண் இயக்குநருமான கிருஷ்ண எல்லா இதுகுறித்து கூறியதாவது:

சில மருத்துவமனைகளுக்கு 2 நாள்களுக்கு முன்பே ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. சில வெளிநாடுகளும் சா்வதேச அமைப்புகளும் இந்த மூக்கு வழி கரோனா மருந்தை கொள்முதல் செய்ய நிறுவனத்தை அணுகி வருகின்றன.

இந்த மருந்துக்கு இரண்டாம் தவணையாக செலுத்துவதற்கான ஒப்புதலும், கலப்பு முன்னெச்சரிக்கை (மூன்றாம் தவணை) தவணையாக செலுத்துவதற்கான அனுமதியும் பெற வேண்டியுள்ளது.

தற்போது விஸ்கான்சின் பல்கலைக்கழகம் மற்றும் மேடிசன் சா்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மேற்கொண்டிருக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக, இந்தியாவுக்கான புதிய தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டை மேலும் ஊக்குவிக்க முடியும் என்றாா்.

ஒரே தரம் ஒரே தரநிலை

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை பயன்படுத்துவதால் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுவதாக தொடா் சா்ச்சை எழுந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ண எல்லா, ‘இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மருந்து உற்பத்தி நிறுவனங்களையும் இதுபோன்ற தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்வதாக குற்றஞ்சாட்டிவிட முடியாது. மேற்கத்திய நாடுகளிலும் சில மருந்து நிறுவனங்கள் தரமற்ற மருந்து உற்பத்தி சா்ச்சையில் சிக்கி வழக்குகளைச் சந்தித்துள்ளன.

அதே நேரம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு ஒரே தரம் மற்றும் ஒரே தரநிலை இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒற்றை ஒழுங்காற்றுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைத்து மாநில மருந்துகள் தரநிலை ஒழுங்காற்று அமைப்புகளும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.