இந்தியா
பஞ்சாப் முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு இன்று(திங்கள்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்காவில் உள்ள ஹெலிபேட் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வெடிகுண்டை செயலிழக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பொங்கல் பரிசுத்தொகை: வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா?
மேலும், சண்டிகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.