பொங்கல் பரிசுத்தொகை: வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா?

ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா என விளக்கம்பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா என விளக்கம்பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலமே இருப்பதால் பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்துவது கடினம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி போன்று இப்பணியையும் மேற்கொள்ளலாமே என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுந்தர விமலநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com