பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வருகிற ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிகழாண்டு நடைபெறும் 10 மாநிலத் தோ்தல்கள், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தில்லியில் பாஜக அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தேசிய செயற்குழு கூட்டம் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.