
ஹிமாசலில் ஒரேநாளில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
ஹிமாசல பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் இன்று காலை 5.10 மணிக்கும் அதைத்தொடர்ந்து 5.17 மணிக்கும் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதில் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்மசாலா நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் 5 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஒரேநாளில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹிமாசலில் மக்கள் பீதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.