ரிமோட் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ரிமோட் வாக்குப்பதிவு வசதி குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
ரிமோட் வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை
Published on
Updated on
1 min read

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ரிமோட் வாக்குப்பதிவு வசதி குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

புலம்பெயர்ந்த வாக்களர்களுக்கு ரிமோட் வாக்குப்பதிவு வசதி பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் தில்லியில் ஆலோசனை நடைபெறுகிறது. புலம்பெயர்ந்த வாக்காளர் தற்போது வசிக்கும் பகுதியிலிருந்து இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் அளிப்பார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னதாக, புலம்பெயர்ந்தோர் தங்கள் உரிமையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, டிசம்பர் 29 அன்று, தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல தொகுதிகளை உள்ளடக்கிய ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com