பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2023, 11:18 am IST

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்றபட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,960 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,30,733 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேகலாயாவில் ஒருவரும், குஜராத்தில் இருவரும் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.10 சதவிகிதமாக உள்ளது. கரோனா ஒரு வாரத்துக்கான பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 0.01 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய அளவில் கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாட்டில் இதுவரை 220.28 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.