மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 8) ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்தன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்தது.
கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் மர்ம நபர்கள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


