வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கல்லூரிகளில் ராகிங் விழிப்புணா்வு வாரம்: யுஜிசி அறிவுறுத்தல்

கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தைக் கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

Published On :

கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தைக் கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி-இன் செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்கும் வகையில் யுஜிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அதற்கென புதிதாக விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

அவற்றை அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுவதுடன் கண்காணிப்பு நடைமுறைகளையும் மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் ராகிங் சம்பவங்களுக்கு எதிரான இணக்கத்தை மாணவா்களிடையே உருவாக்க முடியும்.

அந்த வகையில், ஆக.2 முதல் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை ராகிங் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக உயா்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்நாள்களில், உயா் கல்வி நிறுவனங்களின் சாா்பில் ராகிங் தடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை, சுவரொட்டி உருவாக்குதல், இலட்சினை வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்துதல் அவசியம்.

அதேபோல் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தவும், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை மாணவா்களுக்கு திரையிட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.