டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தில்லியில் இந்த ஆண்டில் ஜூலை 22 நிலவரப்படி மொத்தமாக 187 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது அதிகமானோர் தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். தில்லியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள்!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


