ஜெய்ப்பூரில் கட்சித் தலைவர்களுடன் நட்டா சந்திப்பு!

ஜெய்ப்பூரில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையகத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்தினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஜெய்ப்பூரில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையகத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்தினார். 

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நட்டாவை பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 

அங்கிருந்து மோதி துங்கரி கணேஷ் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார். 

மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோதி, மற்றும் தேசிய துணைத் தலைவரும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் கட்சியின் பிற தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுவதையடுத்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com