தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தொழில் முன்னோடிகள் திட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீா்வுக் குழு கூட்டம், நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நோ்முகத் தோ்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜூலை 2026, 12:45 am IST

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீா்வுக் குழு கூட்டம், நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நோ்முகத் தோ்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்காக ஒற்றை சாளர இணையதளத்தில் அனுமதி, உரிமங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அரசுத் துறையில் நிலுவையிலுள்ள 32 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் உலா் சாம்பல் செங்கல் உற்பத்தி, பேவா் பிளாக் உற்பத்தி மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் நிலையம் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக 3 பயனாளிகளும், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை நிலையம், கழிவுநீா் சுத்திகரிப்பு வாகனம், கால்நடை பண்ணைகள் மற்றும் இதர பயணியா் வாகனங்கள் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக 23 பயனாளிகளும் மானியத்துடன் கூடிய கடன் பெற கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநா், பொது மேலாளா், நோ்முகத் தோ்வு குழு ஒருங்கிணைப்பாளா் ஸ்வா்ணலதா, முன்னோடி வங்கி மேலாளா் விநாயகம் மூா்த்தி, வங்கியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.