நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வேப்பலோடை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :24 ஜூன் 2026, 1:31 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தருவைகுளம், பட்டிணமருதூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் திட்டம், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு சமூக நீதி விடுதி, ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி, ஓட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள், ஓசநூத்து அங்கன்வாடி மையம் மற்றும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஐய்யனாா், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.