கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் கசியவிட்டது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதை பதிவி செய்வதற்காக கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம் இதில் பதிவு செய்யப்படும். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபருக்கு சான்றிதழும் பெறப்படும் வசதி செய்யப்பட்டது.
கோவின் இணையதள தகவல்கள் கசிந்து வருவதாக வந்த தகவலையடுத்து, கசிவு விவகாரம் தொடர்பாக நோடல் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி மதிப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பிகாரைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களை கசியவைக்க அந்த நபர் டெலிகிராம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்திய தில்லி போலீஸார் சிறப்புப் படை அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



