மியான்மரில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 
மியான்மரில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்!
Published on
Updated on
1 min read

நெய்பிடாவ்: மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவல்:

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதன்படி இன்று காலை 5.43-க்கு யான்கோனில் ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் 48 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இரண்டாவதாக யான்கோனில் 160 கி.மீ தூரத்தில் ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது. இது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. 

மூன்றாவதாக யான்கோனின் 227 கி.மீ தூரத்திலும், 25 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com