தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: மீட்புப் பணி தீவிரம்!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 

Updated On :14 மார்ச் 2023, 8:19 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விதிஷா மாவட்டத்தில் உள்ள லேட்டரி தாலுகாவிற்குள்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். 

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவனைப் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. 

சிறுவனைக் கண்காணிக்க கேமரா ஒன்றும் ஆழ்துளைக் கிணற்றுக்கு இறக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.