மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விதிஷா மாவட்டத்தில் உள்ள லேட்டரி தாலுகாவிற்குள்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவனைப் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
சிறுவனைக் கண்காணிக்க கேமரா ஒன்றும் ஆழ்துளைக் கிணற்றுக்கு இறக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியார் பெயரில் கோயிலின் ரூ.100 கோடி நிலம்: ஊழலில் பின்னால் இருக்கும் பவர்சென்டர் யார்? - இபிஎஸ் கேள்வி!







