ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: மீட்புப் பணி தீவிரம்!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விதிஷா மாவட்டத்தில் உள்ள லேட்டரி தாலுகாவிற்குள்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். 

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவனைப் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. 

சிறுவனைக் கண்காணிக்க கேமரா ஒன்றும் ஆழ்துளைக் கிணற்றுக்கு இறக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com