சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

செல்ஃபி எடு.. ஓட்டுப் போடு.. கர்நாடகத் தேர்தலில் அறிமுகம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விறுவிறுப்பான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

News image

செல்ஃபி எடு.. ஓட்டுப் போடு.. கர்நாடகத் தேர்தலில் அறிமுகம்

Updated On :9 மே 2023, 12:33 pm IST


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விறுவிறுப்பான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பெங்களூருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளரின் முகத்தை அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, பெங்களூருவில் அரண்மனை சாலையில் அமைந்துள்ள ராம்நாராயண் செல்லாராம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் அறை எண் இரண்டடில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், தங்களது செல்லிடைபேசியில் தேர்தல் ஆணையத்தின் சுனாவ்னா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்ணை, செல்லிடைபேசி எண்ணை பதிவிட்டு, ஒடிபியை உள்ளீட வேண்டும். இந்த செயலியில், வாக்காளர் தனது செல்ஃபியை எடுத்து பதிவேற்ற வேண்டும். பிறகு வாக்காளர் வாக்குச்சாவடியை அடைந்ததும், அங்கிருக்கும் முகத்தை அடையாளம் காணும் கருவி மூலம் வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப்படும். அவர் அளித்த செல்ஃபியுடன், தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புகைப்படம் ஒத்துப்போனால், அந்த வாக்காளர் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கலாம். 

இந்த வசதி மூலம், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கள்ள ஓட்டுப் போடுவது, மோசடி செய்வது என்பது இருக்காது என்றும் தேர்தல் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

கர்நாடகத்தில் மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.