முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தில்லியில் உள்ள வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.