புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வார் மற்றும் முன்னாள் அமைச்சர் ராம்கோபால் பைர்வா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

News image
Updated On :11 நவம்பர் 2023, 12:54 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ராம் கோபால் மற்றும் முன்னாள் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகிய இருவரும் இன்று (நவம்.11) பாஜகவில் இணைந்தனர். 

ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவர்களை வரவேற்றுப் பேசிய சி.பி.ஜோஷி, “பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாகி வருகிறோம்” என்று தெரிவித்தார். 

2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார் 2021 பிப்ரவரியில் அப்னா பாரத் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பின் 2021 நவம்பரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.