நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியை ஏற்றினார் நிதின் கட்கரி!

இந்தியாவின் புதிய மிக உயரமான தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி

News image

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடி

Updated On :20 அக்டோபர் 2023, 12:12 pm IST

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியினை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று (அக்டோபர் 20) ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அம்ரித்ஸர் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் 418 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கொடியினை ஏற்றி வைத்த பின்பு நிதின் கட்கரி பேசியதாவது: இது என் வாழ்வின் பொன்னான நாள். அட்டாரி - வாகா எல்லைப் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். இந்த இடம் உங்களுக்கு இந்திய நாட்டுப் பற்றை ஊட்டக்கூடியது. சுரங்கப் பாதைகள், சாலைகள், மேம்பாலங்கள் என எவ்வளவோ பணிகளைச் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் விட இந்த தேசியக் கொடியினை அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடகாவின் பெலகாவியில் அமைக்கப்பட்டிருந்த 361 அடி உயர தேசியக் கொடியே இந்தியாவின் உயரமான தேசியக் கொடி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. 

இந்திய தேசியக் கொடியானது நாட்டின் மதநல்லிணக்கத்தையும், இந்தியாவின் பெருமைகளையும் எடுத்தியம்பும் விதத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.