தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரதமர் மோடியுடன் சேர்ந்தால் பின்னடைவு: மிசோரம் முதலமைச்சர் பேச்சு!

பிரதமர் மோடியுடன் சேர்ந்து மேடை ஏறினால் தனக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பாஜக கூட்டணியில் உள்ள மிசோரம் முதல்வர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மிசோரம் முதல்வர் சோரம்தங்கா

Updated On :25 அக்டோபர் 2023, 6:15 am

DIN

மிசோரமில் சோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது கட்சி பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது. 

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் மிசோரமும் ஒன்று. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனை முன்னிட்டு பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இம்மாதம் 30-ஆம் தேதி மிசோரம் செல்கிறார். 

இந்நிலையில் பிரதமர் மோடி மிசோரம் வரும்போது அவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்று பாஜக கூட்டணியில் உள்ள சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “மணிப்பூரை சேர்ந்த மெய்தி இன மக்கள், நூற்றுக்கணக்கான தேவாலயங்களை எரித்துள்ளனர். இதனால் மிசோரம் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நேரத்தில் பாஜகவுடன் சேர்ந்தால் எங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். 

எனவே, பிரதமர் மோடி பிரச்சாரத்துக்காக மிசோரம் வரும்போது நான் அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ளமாட்டேன். அவர் தனியாக பிரச்சாரம் செய்யட்டும், நான் தனியாக பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.