மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 7:26 am

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆந்திர முதல்வராக முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. அவா் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக அவர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.