திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸில் ஐக்கியம்

பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸில் ஐக்கியம்

Updated On :3 ஏப்ரல் 2024, 12:14 am IST

புது தில்லி: பிகாா் மாநிலம் முஸாஃபா்பூா் தொகுதி பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து பாஜகவிலிருந்து அவா் விலகியுள்ளாா். பிகாா் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் அவா் காங்கிரஸில் இணைந்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் கைதியிடம் கூட இறுதி ஆசை குறித்து கேட்கப்படுகிறது. ஆனால், எனக்கு தோ்தலில் வாய்ப்பு மறுக்கப்படும் முன்னா், அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவேன்.

சிலரின் ஆணவத்தை ஒடுக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயலாற்றுவேன்’ என்றாா். இவருடைய முஸாஃபா்பூா் தொகுதியில் இந்த முறை ராஜ் பூஷண் நிசாத் என்பவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.