சீன ஆக்கிரமிப்புக்கு மோடி மெளனம் காப்பது ஏன்? காங்கிரஸ்

இந்திய எல்லைகள் மீதான சீன ஆக்கிரமிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்?
ஆதிர் ரஞ்சன் செளத்ரி
ஆதிர் ரஞ்சன் செளத்ரிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய எல்லைகள் மீதான சீன ஆக்கிரமிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்பட 30 இடங்களுக்கு சீனா தங்கள் மொழியில் பெயர்களை மாற்றியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து சீனா 4வது முறையாக பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்ரி, சீனா உடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் மறுபுறம் சீனா இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கிறது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இவ்வளவு நடந்தும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். அது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com