சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜஸ்தான்: தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலி

News image
கோப்புப் படம்.
Updated On :5 ஏப்ரல் 2024, 1:50 pm

Sasikumar

ராஜஸ்தானில் தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ரேஷ்மா என்கிற 4 வயது குழந்தை தனது தந்தை வருகைக்காக இன்று காத்திருந்தது.

அப்போது தெரு நாய் கடித்ததில் ரேஷ்மா பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. உடற்கூராய்வுக்கு பின் குழந்தையின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷ்மா குடும்பத்தினர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதியை பார்வையிட வந்ததாக அம்பா மாதா காவல் நிலைய தலைமைக் காவலர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.