

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவிகிதமாக தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயராமல் பழைய நிலையே நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ள்ளார்.
பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ரெப்போ வட்டி விகிதம் 7-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.