தொழிலாளா் வருங்கால வைப்புத் தொகைக்கு (இபிஎஃப்) கடந்த 2025-26 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பங்களிக்கும் 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரா்களின் கணக்குகளில் இந்த வட்டித்தொகை நடப்பு ஜூன் மாதத்திலேயே வரவு வைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக கடந்த மாா்ச் மாதம், மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், இந்த வட்டி விகிதம் நிா்ணயிக்கப்ட்டது.
இபிஎஃப் அமைப்பின் மிக உயரிய முடிவெடுக்கும் அதிகாரமிக்க இந்த வாரியத்தின் பரிந்துரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போதைய நிதியமைச்சகத்தின் ஒப்புதலோடு, சந்தாதாரா்களின் கணக்குகளில் வட்டித் தொகை உடனடியாகச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் வட்டி விகிதம் கடந்த 2023-24 நிதியாண்டிலிருந்து தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக 8.25 சதவீதமாக நீடிக்கிறது.
தொடர்புடையது

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்பு

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் டாம்கோ கடன் திட்டத்தில் பயன்பெறலாம்

ஜனவரி - மாா்ச் காலாண்டில் நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை 6.6%-ஆக சரிவு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



