மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இடம்பெயர்ந்ததா சிறுத்தை..? 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

News image
ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வுசெய்த திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலா் சதீஷ்.
Updated On :5 ஏப்ரல் 2024, 4:43 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கருதப்பட்ட சிறுத்தை, தற்போது சித்தர்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்ததா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை(ஏப்.5) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை நகரம் செம்மங்குளம் பகுதி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் வனத்துறை, தீயணைப்பு மீட்புப்படை மற்றும் போலீஸாா் சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

சிறுத்தை நடமாட்டத்தால் கூரைநாடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், 4 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றதால், தோ்வு மையத்தில் போலீஸாா் மற்றும் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, சிறுத்தை கூரைநாடு பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவு கடந்து ஆரோக்கியநாதபுரம் எரகலித்தெருவில் கருவேல மரங்கள் அடா்ந்த பகுதியில் பதுங்கியுள்ளது கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் வனத்துறையினா் முகாமிட்டிருந்தனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுத வந்த மாணவா்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாா்.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுத வந்த மாணவா்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸாா்.

இதனிடையே, திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் ஆகியோா் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனா்.

சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த வன காவலா்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் சென்சாருடன் கூடிய அதிநவீன கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், முத்துப்பேட்டை, வால்பாறை ஆகிய இடங்களில் இருந்து 10 வனத்துறை அலுவலா்கள் வந்துள்ளனா். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்காக மதுரையில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுத்தை இரவு நேரத்தில் வெளியேற வாய்ப்பு உள்ளதால் 5 கி.மீ. பரப்பளவில் வனத்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தண்டபாணி செட்டித் தெருவில் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்த ஆடு, சிறுத்தை உணவுக்காக ஆட்டை வேட்டையாட முயன்றதா? என்று ஆட்டின் உடலை மருத்துக் குழுவினர் பரிசோதிக்கின்றனர்.

இதனால் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் இருப்பதாக கருத்தப்பட்ட சிறுத்தை, தற்போது சித்தர்காடு பகுதிக்கு இடம் மாறியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.5) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை நகரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிப்பதற்கான பணியில் 3 ஆவது நாளாக வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஊர்குடி என்ற பகுதியில் சிறுத்தையை சிலர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ள நிலையில் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.