மாலத்தீவுக்கு குறிப்பிட்ட அளவில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாலத்தீவு தலைநகா் மாலியில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
2024-25-ஆம் ஆண்டுகளில் மாலத்தீவுக்கு குறிப்பிட்ட அளவில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது. மாலத்தீவு அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூஸா ஜமீா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘2024, 2025-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருள்களை மாலத்தீவு இறக்குமதி செய்ய வழிவகுத்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘ அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி (சாகா்) ஆகிய கொள்கைகளில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பிரசாரம் செய்ய வந்ததை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டலாமா விஜய் சார்?

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஈரான்!

மேற்காசியப் போா் உலகுக்கு சோதனைக் காலம்: இந்தியா கவலை

ஐபிஎல் 2026: யான்சென் இந்தியாவுக்கு தாமதமாக வர ரிக்கி பாண்டிங் அனுமதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

