இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தில்லி தேர்தல் ஆணையம் முன்பு திரிணமூல் போராட்டம்!

தில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன்பு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 6:21 pm IST

தில்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன்பு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் முன்பு அமைதியான வழியில் 24 மணிநேர போராட்டத்தில் திரிணமூல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் எம்.பி.க்களும் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 10 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் எம்.பி. டோலா சேனாவை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பாக பேசிய அவர், என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை தலைமை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இதனை வலியுறுத்தி 24 மணிநேர அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.