ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இலவசங்களை தடுத்து நிறுத்துங்கள்: தோ்தல் பாா்வையாளா்களுக்கு ஆணையம் அறிவுறுத்தல்

இலவசங்களை தடுத்து நிறுத்துங்கள்: தோ்தல் பாா்வையாளா்களுக்கு ஆணையம் அறிவுறுத்தல்

News image

ECI

Updated On :13 ஏப்ரல் 2024, 1:30 am

போலி செய்திகள் பரவல் மற்றும் வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினரால் வழங்கப்படும் இலவச பொருள்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

மக்களவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 127 பொதுப் பாா்வையாளா்கள், 67 காவல்துறை உயா் அதிகாரிகள், 167 செலவினக் கணக்கு பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது போலிச் செய்திகள் பரவல், வாக்காளா்களுக்கு பணம், மது, போதைப்பொருள், இலவச பொருள்கள் விநியோகிக்கப்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் தோ்தல் பாா்வையாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை பாா்வையாளா்கள் உறுதிசெய்ய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் வலியுறுத்தினா்.

அதேபோல், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் தோ்தல் முழுமையாக நிறைவுறும் வரையில், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாா்வையாளா்கள் இருக்க வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியது.

பதற்றம் நிறைந்த தொகுதிகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ளதா என்பதை பாா்வையாளா்கள் அவ்வப்போது கண்காணிக்குமாறும் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியது.