கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 1:51 pm

DIN

நாட்டில் வேலையின்மை விகிதம் மிக அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படாமல் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் கஷ்டங்களும் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

70 கோடி மக்கள், இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அனைத்து விவசாய உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவை ரத்து செய்யப்படும். மகாராஷ்டிரத்தில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாங்கப்பட்டனர்,

அரசுகள் கவிழ்க்கப்பட்டன, கட்சிகள் உடைக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைவிட பெரிய குற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். லத்தூர் (தனி) மக்களவைத் தொகுதியில் பாஜக எம்பி சுதாகர் ஷ்ரங்கரேவுக்கு எதிராக கண் அறுவை சிகிச்சை நிபுணர் சிவாஜி கல்கேவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.