அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 9:58 pm

Vishwanathan

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப். 26-ஆம் தேதி நடைபெற்றது. அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் மஜதவுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஜதவின் உயர்நிலைக் குழு கூட்டம் குழு தலைவர் ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பிரஜ்வல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் ஜி.டி.தேவெ கெளடா கூறியதாவது:

சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு கட்சித் தலைவர் எச்.டி.தேவெ கெளடாவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மஜத அறிவிப்பு வெளியிட்டது.

உயர்நிலைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறுகையில், "பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்ஐடி) அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மீதான இடைநீக்க நடவடிக்கை அமலில் இருக்கும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.