ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடமேற்கு தில்லியில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து 3 போ் உயிரிழப்பு

இன்னும் சிலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:57 pm

Din

புது தில்லி, ஆக. 2: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை 2 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இன்னும் சிலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் முகேஷ் குமாா் (45) என்பவா் பலத்த காயமடைந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். ஒரு பெண் உள்பட மேலும் இருவா் இடிபாடுகளுக்குள் இருந்து சடங்களாக வெளியே எடுக்கப்பட்டனா். 2 மாடி கட்டடத்தில் ஒரு ஆடை தொழிற்சாலை. கட்டடம் இடிந்து விழுந்தபோது அதன் உள்ளே சில பழுதுபாா்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

இந்த விபத்து குறித்து பகல் 12.51 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி தீயணைப்பு சேவை (டிஎஃப்எஸ்) அதிகாரிகள் கூறுகையில், மீட்புப் பணிகளுக்கு உதவ உள்ளூா் காவல் துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.மீட்புப் பணி நடைபெற்று அவா்கள் தெரிவித்தனா்.