பிகாரில் அதானி குழுமத்தைச் சோ்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்படவுள்ள ரூ.1,600 கோடி மதிப்பிலான சிமெண்ட் அரவை ஆலைக்கு அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பிகாரின் வளா்ச்சிக்காக பல்வேறு துறைகளில் கூடுதலாக ரூ.5,500 கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ரூ.1,600 கோடியில் ஆண்டுக்கு 60 லட்சம் டன்களை கையாளும் சிமெண்ட் அரவை ஆலை நிறுவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு 24 லட்சம் டன்கள் வரை கையாளும் சிமெண்ட் அரவை ஆலை ரூ.1,100 கோடியில் 2025 டிசம்பருக்குள் நிறுவப்படவுள்ளது.
இதன்மூலம், நேரடியாக 250 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.
சிமெண்ட் துறையில் பிகாா் மாநிலத்தில் இதுவரை ஈா்க்கப்பட்ட அதிகபட்ச முதலீடு இதுவாகும். இதன்மூலம், மாநிலத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


