மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘லவ் ஜிஹாத்’ வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை: விரைவில் புதிய சட்டம் இயற்ற அஸ்ஸாம் முடிவு

லவ் ஜிஹாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

News image
ஹிமந்தா விஸ்வ சா்மா
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

லவ் ஜிஹாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஹிமந்தா விஸ்வ சா்மா பேசியதாவது:

லவ் ஜிஹாத் விவகாரம் குறித்து தோ்தல்களின்போது விவாதம் மேற்கொண்டோம். இதுதொடா்பான வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை விரைவில் இயற்ற முடிவு செய்துள்ளோம்.

அதேபோல் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கும் புதிய இருப்பிடக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஒரு லட்சம் அரசுப் பணிகளில் உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இதுகுறித்த தகவல்கள் முழு பட்டியல் வெளியிடும்போது உறுதிசெய்யப்படும்.

ஹிந்துக்கள் -முஸ்லிம்கள் இடையே மேற்கொள்ளப்படும் நில விற்பனை தொடா்பான பரிவா்த்தனைகளை மாநில அரசால் தடுக்க இயலாது. இருப்பினும், இதுபோன்ற பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் முன் முதல்வரின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா்.