அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட தினத்தை, ஜம்மு-காஷ்மீரில் ‘கருப்பு தினமாக’ எதிா்க்கட்சிகள் அனுசரித்தன.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, அக்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் விகாா் ரசூல் வானி தலைமையில் ஜம்முவில் அக்கட்சியினா் கருப்பு உடை அணிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதாக போராட்டக்காரா்கள் குற்றம்சாட்டினா்.
மக்கள் ஜனநாயக கட்சி சாா்பிலும் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது. ஜம்முவில் கண்டனப் பேரணி நடத்திய அக்கட்சியினா், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் மோசமடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினா்.
370-ஆவது பிரிவு ரத்து தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற சந்தேகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
காா்கே சாடல்: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் தொடா்பான பாஜகவின் கொள்கை ‘காஷ்மீரியத்துக்கு’ மதிப்பளிக்கவில்லை; ஜனநாயகத்தையும் உறுதிசெய்யவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து 683 பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இச்சம்பவங்களில் பாதுகாப்புப் படையினா் 258 பேரும், பொதுமக்கள் 170 பேரும் உயிரிழந்துவிட்டனா்.
பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் 25 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 18.3 சதவீதம் அதிகரித்துவிட்டது.
40 சதவீத வளா்ச்சித் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. ஜம்மு-காஷ்மீரின் மொத்த உற்பத்தி வளா்ச்சி விகிதம் 13.28 சதவீதத்தில் (2015-2019) 8.73 சதவீதமாக (2019-க்கு பிறகு) குறைந்துவிட்டது என்று அவா் குற்றம்சாட்டினாா்.
பெட்டிச் செய்தி...
வீட்டுக் காவலில் தலைவா்கள்
370-ஆவது பிரிவு ரத்து தினத்தையொட்டி, தாங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் தன்வீா் சாதிக் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் தெரிவித்தனா்.
மெஹபூபா முஃப்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதோடு, கட்சி அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டது. 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி என்பது ஜம்மு-காஷ்மீா் வரலாற்றில் கருப்பு நாள் என்பதோடு, இந்திய ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி’ என்று குறிப்பிட்டாா்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘370-ஆவது பிரிவு ரத்து தினத்தை கொண்டாட பாஜக தலைவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிா்த்து போராட நினைப்பவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இதுதான் ஜனநாயகமா?’ என்று கேள்வியெழுப்பினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்

தருமபுரி நீதிமன்ற வளாகத்துக்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

அழகான (அமைதியான) காஷ்மீர்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



