சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

சற்று முன்... மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு

News image
வினேஷ் போகத்
Updated On :8 ஆகஸ்ட் 2024, 1:21 am

DIN

மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னிடம் இனி போராட சக்தியில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார் வினேஷ் போகத்.

“நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது... என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன... இனிமேலும் போராட வலுவில்லை என்னிடம்...

மல்யுத்தத்திலிருந்து(2001 - 2024) விடைபெறுகிறேன். மன்னிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” எனப் திவிட்டுள்ள்டு விடைபெற்றுள்ளார் போகத்.

வினேஷ் போகத் மேல்முறையீடு

தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். இந்நிலையில், கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.