பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனு: ஆக.12-க்கு ஒத்திவைப்பு!

பூஜா கேத்கரின் முன்ஜாமீன் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பூஜா கேத்கர்
பூஜா கேத்கர்
Published on
Updated on
1 min read

முன்னால் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பூஜா கேத்கர்
குழப்பங்கள் தீரும் தனுசு ராசிக்கு: வார பலன்கள்

இதை விசாரித்த மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி, பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் பூஜா தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது. மேலும், யுபிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் பூஜா மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பூஜா கேத்கர்
ஆக. 19-க்குப் பிறகு துணை முதல்வர் உதயநிதி?

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு இன்று கூடாததால் பூஜா கேத்கரின் முன்ஜாமீன் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பூஜா கேத்கரின் முழு சதியையும் வெளிக்கொண்டு வரவும், சதியில் ஈடுபட்ட மற்ற நபர்களின் தொடர்பை உறுதிப்படுத்தவும் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com