அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

போகபுரம் விமான நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராம்மோகன்!

போகபுரம் விமான நிலையத்தின் பணிகளின் முன்னேற்றத்தை இன்று ஆய்வு செய்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

News image

போகாபுரம் விமான நிலையம்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:45 pm IST

புதுதில்லி: 2026 ஜூன் மாதத்திற்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஆந்திராவின் போகபுரம் விமான நிலையத்தின் பணிகளின் முன்னேற்றத்தை இன்று ஆய்வு மேற்கொண்டார் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

விமான நிலையத்தை ஜிஎம்ஆர் குழுமம் உருவாக்கி வரும் நிலையில், முனைய கட்டிடம், ஓடுபாதை கட்டுமானம், ஏப்ரன் மற்றும் அணுகு சாலைகள் உள்ளிட்ட விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் மாதத்திற்குள் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதத்தில் மூன்று முறை விமான நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன், இது தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஒரு மதிப்புமிக்க மகுடம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.