முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!

கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்
நட்வர் சிங் (கோப்புப் படம்)
நட்வர் சிங் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானதையடுத்து, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வாரங்களாக தில்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நட்வர் சிங் ஆக. 10, சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இந்த நிலையில், நட்வர் சிங்கின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-05 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார்.

பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

நட்வர் சிங் (கோப்புப் படம்)
அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு! அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்

நட்வர் சிங் நாட்டிற்கு செய்த சேவைக்காக, அவருக்கு 1984 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

'ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்' என்ற தலைப்பில் இவரது சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com