காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பாஜகவில் இணைகிறேனா? சம்பயி சோரன் விளக்கம்

பாஜகவில் இணைவதாக வெளியான ஊகங்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பதிலளித்துள்ளார்.

News image

சம்பயி சோரன்(கோப்புப்படம்)

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:24 pm IST

பாஜகவில் இணைவதாக வெளியான ஊகங்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பதிலளித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சம்பயி சோரன் பாஜகவில் இணையலாம் என்று செய்திகள் இன்று வெளியாகியிருந்தன.

இதனிடையே ஜாம்ஷெட்பூருக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதுபோன்ற ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் இருக்கும் இடத்தில் இருக்கிறேன். ஹெம்ப்ரோம் தான் என்னைச் சந்தித்தார். அப்போது நாங்கள் வழக்கமான விவாதங்களைக் கொண்டிருந்தோம் என்றார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஜேஎம்எம் எம்எல்ஏ ஹெம்ப்ரோம் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் ஹெம்ப்ரோம்-ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் சந்திப்பு ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.