அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

தில்லி கல்காஜி கோயிலில் மணீஷ் சிசோடியா வழிபாடு!

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

News image

மணீஷ் சிசோடியா வழிபாடு

Updated On :17 ஆகஸ்ட் 2024, 12:29 pm IST

தில்லி கலால் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த வாரம் ஜாமீனில் வந்ததையடுத்து, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடிய கல்காஜி கோயிலில் வழிபாடு செய்தார்.

கோயிலில் வழிபாடு செய்தபின்னர் அவர் பேசியதாவது,

சிறையிலிருந்து வெளியே வந்ததும், கல்காஜி கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்ததாகவும், தில்லி பொதுமக்களின் பிரார்த்தனைகளைக் கேட்டதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்தித்து கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மேலும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த சிசோடியா, “நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்துக்கு எதிராக தில்லி முதல்வர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறார்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.