15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லி கல்காஜி கோயிலில் மணீஷ் சிசோடியா வழிபாடு!

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

News image

மணீஷ் சிசோடியா வழிபாடு

Updated On :17 ஆகஸ்ட் 2024, 6:59 am

தில்லி கலால் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த வாரம் ஜாமீனில் வந்ததையடுத்து, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடிய கல்காஜி கோயிலில் வழிபாடு செய்தார்.

கோயிலில் வழிபாடு செய்தபின்னர் அவர் பேசியதாவது,

சிறையிலிருந்து வெளியே வந்ததும், கல்காஜி கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்ததாகவும், தில்லி பொதுமக்களின் பிரார்த்தனைகளைக் கேட்டதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்தித்து கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மேலும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த சிசோடியா, “நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்துக்கு எதிராக தில்லி முதல்வர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறார்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.